மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி (DA) உயர்வு? முழு விவரம் இதோ!
வரும் ஜூலை மாதத்தில் பணவீக்கம் அதிகமாக இருப்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தொகை 4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்பு மே 31 அன்று வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது, ஜூலை மாத இறுதியில் எவ்வளவு அகவிலைப்படி அதிகரிக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிடலாம். பொதுவாக, DA தொகை ஆண்டுக்கு ஜனவரி மற்றும் ஜூலை என இரண்டு முறை திருத்தப்படுகிறது. இப்போது, சில்லறை பணவீக்கம் மிக அதிகமாக இருப்பதால் அடுத்த அகவிலைப்படி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு பேருந்துகளில் இலவச பயணம் – 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லை!
அதாவது, 7வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA தொகை 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் திருத்தப்பட்டது. இப்போது, சில்லறை பணவீக்கம் மிக அதிகமாக இருப்பதால், அடுத்த அகவிலைப்படி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சிபிஐ அடிப்படையிலான பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவு 7.79 சதவீதமாக இருந்தது.
Exams Daily Mobile App Download
இதற்கு, முன்னதாக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி தொகையை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இப்போது, ஜனவரி 2022 முதல் அரசு ஊழியர்களுக்கு DA மற்றும் DR முந்தைய விகிதத்தில் இருந்து 34 சதவீத விகிதத்தில் வழங்கப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஜூலை மாத தவணைக்கான அகவிலைப்படி தொகை 4% என்ற அளவில் உயர்த்தப்படும் என ஊடக அறிக்கைகள் கூறுகிறது. அப்படி நடந்தால், அரசு ஊழியர்களுக்கு மொத்த DA 38% ஆகி அதிகரிக்கும்.