மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன் DA உயர்வுத்தொகை – மற்ற பலன்களுடன்!
தீபாவளியை முன்னிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) விகிதம் 31% மாக திருத்தப்பட்டுள்ள நிலையில் இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கும் உதவும் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
DA உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் DA விகிதத்தை 28% லிருந்து 31% ஆக அரசு உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய விகிதம் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை (DoE), அக்டோபர் 25ம் தேதி வெளியிட்ட அலுவலக குறிப்பில், ‘மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி தொகை தற்போது 31% ஆக உயர்த்தப்படுகிறது.
தமிழகத்தில் வங்கி பணி தேர்வுக்கு இலவச பயிற்சி தொடக்கம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இவை ஜூலை1, 2021 முதல் அமலுக்கு வரும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புதிய விகிதத்தின்படி DA தொகையை கணக்கிடுவதற்கான அடிப்படை ஊதியத்தில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையும் அடங்கும். அதாவது திருத்தப்பட்ட ஊதிய அமைப்பில் உள்ள அடிப்படை ஊதியம் என்பது, அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, பே மேட்ரிக்ஸால் நிர்ணயிக்கப்பட்ட அளவில் பெறப்படும் ஊதியம் ஆகும்.
ஆனால் சிறப்பு ஊதியம் போன்ற வேறு எந்த வகை ஊதியமும் இதில் சேர்க்கப்படவில்லை என்று நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை கூறுகிறது. மேலும், அகவிலைப்படியானது ஊதியத்தின் ஒரு தனித்துவமான அம்சமாகத் தொடரும் என்றும் FR 9(21) இன் வரம்பிற்குள் ஊதியமாக கருதப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் 1 முதல் 1 – 5ம் வகுப்புகளுக்கு முழு நேரம் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு!
இந்த திருத்தப்பட்ட DA விகிதம், மத்திய அரசு ஊழியர்களைத் தவிர பாதுகாப்பு சேவைகள் பிரிவை சேர்ந்த சிவில் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் பாதுகாப்பு சேவைகள் மதிப்பீடுகளின் தொடர்புடைய தலைவரிடம் இந்த செலவினங்கள் வசூலிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பாதுகாப்பு அமைச்சகம், ரயில்வே அமைச்சகம், ஆயுதப்படை பணியாளர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு தனித்தனி உத்தரவுகளை அரசு வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.