நவம்பர் 1 முதல் 1 – 5ம் வகுப்புகளுக்கு முழு நேரம் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. எனவே நவம்பர் 1ஆம் தேதி முதல் முழு நாள் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் பி.சி.நாகேஷ் கோரியுள்ளார்.
முழு நேர வகுப்பு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 6 முதல் 8ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது கர்நாடகா அரசு.
அக்.29ம் தேதி ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம் & தொழிற்பழகுநர் பயிற்சி – கலெக்டர் அறிவிப்பு!
இந்நிலையில் அம்மாநிலத்தில் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து அனுமதி வழங்கப்பட நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அரசு ஆரம்ப பள்ளிகள் திறக்கப்பட்டது. எனவே அமைச்சர் பி.சி.நாகேஷ் சிவமொக்காவில் மலவகொப்பா பகுதியில் அரசுப் பள்ளியை பார்வையிட்டு மாணவர்களுடன் உரையாடினார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – தீபாவளிக்கு பிறகு பொருட்களை வாங்கலாம்!
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் பள்ளிக்கு வர ஆர்வமாக இருப்பதாக கூறினார். அரசு தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்தது என்றும் அவர் கூறினார். மாநிலத்தில் வரும் 31 ஆம் தேதி வரை அரை நாள் வகுப்புகள் மட்டுமே நடக்கும் என்றும் நவ.1ம் தேதி முதல் முழு நாள் வகுப்புகள் நடத்தப்படும், அத்துடன் சத்துணவு வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.