தமிழகத்தில் வங்கி பணி தேர்வுக்கு இலவச பயிற்சி தொடக்கம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று முடிவுக்கு வந்துள்ளதை தொடர்ந்து பல்வேறு அரசுத் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் வங்கி பணிகளுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இலவச பயிற்சி நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி பணி தேர்வு:
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலன் கருதி அரசுத்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சியானது நல்ல திறமையும், தகுதியும் வாய்ந்த பேராசிரியர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கமே கிராமபுற மாணவர்கள் அரசு வேலைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதாகும்.
நவம்பர் 1 முதல் 1 – 5ம் வகுப்புகளுக்கு முழு நேரம் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு!
இந்த தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பயிற்சி பெற்று ஏராளமானோர் அரசு வேலைகளுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மையத்தில் அரசு வேலை தொடர்பான புத்தகங்கள் அனைத்தும் உள்ளன. அதனை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை எடுத்து படித்து பயன்பெறலாம். இந்த அமைப்பு மூலம் வங்கி தேர்வு, TNPSC தேர்வு, TRB தேர்வு, TNUSRB தேர்வு மற்றும் பல தேர்வுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி வகுப்புகள் அரசு தேர்வு அறிவிப்பு வருவதற்கு 1 மாதத்திற்கு முன்னர் தொடங்கப்படும். தற்போது பாரத ஸ்டேட் வங்கி மற்றும் மத்திய பதிவாளர் தேர்வாணையம் பல்வேறு காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அக்.29ம் தேதி ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம் & தொழிற்பழகுநர் பயிற்சி – கலெக்டர் அறிவிப்பு!
இந்த பணியிட தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நாளை அக்.27-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்துடன் நாளை காலை 10 மணிக்கு அலுவலகத்துக்கு நேரில் வந்து வகுப்பில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அம்மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார். அதனால் தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.