அக்.29ம் தேதி ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம் & தொழிற்பழகுநர் பயிற்சி – கலெக்டர் அறிவிப்பு!

0
அக்.29ம் தேதி ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம் & தொழிற்பழகுநர் பயிற்சி - கலெக்டர் அறிவிப்பு!
அக்.29ம் தேதி ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம் & தொழிற்பழகுநர் பயிற்சி - கலெக்டர் அறிவிப்பு!
அக்.29ம் தேதி ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம் & தொழிற்பழகுநர் பயிற்சி – கலெக்டர் அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன பணியிடங்களுக்கு வருகிற அக்.29 ஆம் தேதி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தொழில் நிறுவனங்களில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனால் வேலையிழப்பு அதிகரித்துள்ளது. இதனால் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடங்கி உள்ளனர். மேலும் தொழில் நிறுவனங்கள் வழக்கம் போல செயல்பட தொடங்கி உள்ளன.

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – தீபாவளிக்கு பிறகு பொருட்களை வாங்கலாம்!

இந்நிலையில் ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற அக்.29 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொழில்பழகுநர் பயிற்சி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார், அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதியம் 1 மணிநேரம் உணவு இடைவேளை? முக்கிய கோரிக்கை!

அதற்கான கல்வித் தகுதியாக ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்கள், 10 ஆம் வகுப்பு அதற்கு மேலும் கல்வித்தகுதி உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் ஐடிஐ பயிற்சி பெறாத 10, 12 ஆம் வகுப்பு கல்வித்தகுதி உடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் தொழில் பழகுநராக சேர்ந்து தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெறலாம். இந்த பயிற்சிக்கு வயது வரம்பு இல்லை. இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ. 8000 முதல் ரூ.10000 வரை வழங்கப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனரை 0416-229034, 8778253089, 9794158772 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!