தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – தீபாவளிக்கு பிறகு பொருட்களை வாங்கலாம்!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தீபாவளிக்கு முன்பாக பொருட்களை வாங்க முடியாதவர்கள் நவம்பர் 8ம் தேதிக்கு பின் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்திக் குறிப்பையும் வெளியிட்டுள்ளது.
ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் மலிவு விலையில் பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை மக்கள் பயன்பெற்று வருகின்றனர். எப்போதும் மாத தொடக்கத்தில் பொருட்கள் வழங்கப்படும். அதன்படி நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதியம் 1 மணிநேரம் உணவு இடைவேளை? முக்கிய கோரிக்கை!
இந்த தேதிகளில் பொருட்கள் வாங்காத ரேஷன் அட்டைதாரார்கள் தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு நவம்பர் 8ம் தேதி ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து கூட்டுறவுத்துறை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நியாய விலை கடைகளில், போதுமான அளவு காவலர்களை நியமித்து சட்டம் ஒழுங்கு நிலையை சீராக பேணவும், கொரோனா பெருந்தொற்று தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – அக்.30ல் 7வது மெகா முகாம்!
தீபாவளிக்கு முன்னதாக பொருட்களை வாங்காதவர்கள் தீபாவளிக்கு பிறகு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட வேண்டும். பொருட்கள் விநியோகம் குறித்த பணிகளை கண்காணிக்க அந்தந்த பகுதி வாரியாக உரிய அலுவலர்களை நியமிக்க வேண்டும். மேலும் பண்டிகை தினத்தை முன்னிட்டு எவ்வித புகார்களும் எழாத வண்ணம் கூட்டுறவுத்துறையின் அறிவுறுத்தலுக்கு இணங்க விற்பனை நடைபெற வேண்டும். பணிகளை சிறப்பிக்க செய்து முடிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.