தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – அக்.30ல் 7வது மெகா முகாம்!
தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் குறைவானவர்கள் தான் இரண்டாம் கட்ட கோவேக்ஸின் தடுப்பூசி போட வேண்டியுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தடுப்பூசி முகாம்:
நாடு முழுவதும் கொரோனா அலை கோரத்தாண்டவம் ஆடியது. அதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா பரவும் விகிதம் படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை என பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் மூன்றாவது அலை பரவும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் அனைத்து துறை செயலர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தலைமை செயலரின் அறிவுறுத்தல்!
அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு ஏதுவாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வாரா வாரம் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தமிழக அரசு. கடந்த 6 வாரங்கள் தொடர்ச்சியாக தடுப்பூசி முகாம்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு – 23 முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம்!
இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் மது மற்றும் மாமிசம் சாப்பிடக்கூடாது என்ற தகவல் பரவி வந்ததனால் பலர் தடுப்பூசி செலுத்தி கொள்வதை தவிர்த்து வந்தனர். எனவே மாமிச மற்றும் மது பிரியர்களுக்காக சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏழாம் கட்ட தடுப்பூசி முகாமானது அக்டோபர் 30 அன்று நடத்தப்படும். மேலும், தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் குறைவானவர்கள் தான் இரண்டாம் கட்ட கோவேக்ஸின் தடுப்பூசி போட வேண்டியுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.