மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அகவிலைப்படி (DA) விரைவில் அதிகரிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பளத்தை உயர்த்த உள்ளதாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளன. மேலும் அகவிலைப்படி 31 விழுக்காடாக உயர்த்த்ப்பட்டுள்ளதை மீண்டும் உயர்த்த உள்ளதாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
சம்பள உயர்வு
கொரோனா கால கட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு எந்தவித ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. ஏனெனில் நிதி நெருக்கடி நாட்டில் நிலவியது. இதனால் நிதி நெருக்கடி கட்டுப்படுத்தும் விதமாக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைத்துள்ளதை அடுத்து பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அத்துடன் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அண்மையில் உயர்த்தப்பட்டது. மேலும் தீபாவளி பண்டிகை பரிசாக இந்த அகவிலைப்படி உயர்வு இருந்தது.
ஆதார் கார்டில் முகவரி, DOB விபரங்களை மாற்ற விரும்புவோர் கவனத்திற்கு – முக்கிய தகவல்!
அத்துடன் அகவிலை நிவாரணமும் அதிகரிக்கப்பட்டது. இதன்படி தற்போது அகவிலைப்படி 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் மீண்டும் 3 விழுக்காடு உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு அகவிலைப்படி 3 விழுக்காடு உயர்த்தப்பட்டால் மொத்த அகவிலைப்படி 34 விழுக்காடாக உயரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்படுவது அரசு ஊழியர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும்.
தமிழகத்தில் டிச.15க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? டிச.13ல் முதல்வர் முக்கிய ஆலோசனை!
ஆனால் வீட்டு வாடகைப் படியை உயர்த்தும்படி அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர். அதே போல் அடிப்படை சம்பளத்தையும் உயர்த்தும்படியும் கோரிக்கைகளை வைத்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் வரும் ஜனவரியில் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றன. அத்துடன் மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் விரைவில் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.