ஆதார் கார்டில் முகவரி, DOB விபரங்களை மாற்ற விரும்புவோர் கவனத்திற்கு – முக்கிய தகவல்!
ஆதார் கார்டில் உள்ள உங்களின் பெயர் மற்றும் பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை எத்தனை முறை மாற்றலாம் என்பது குறித்து ஆதார் அமைப்பு வெளியிட்ட தகவல்களை இப்பதிவில் காண்போம்.
ஆதார் கார்டு:
இந்தியாவில் ஆதார் அட்டை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. நமது நாட்டில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு தொடங்கவும், பான் கார்டு பெறவும், பள்ளி ,கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களிலும், தனிநபர் சார்ந்த அனைத்து வேலைகளுக்கும் ஆதார் எண் அவசியமாக உள்ளது. மேலும் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியமாகும். ஆதாரில் தேவைக்கேற்ற விவரங்களை புதுப்பித்து கொள்ளும் வசதி உள்ளது.
தமிழகத்தில் டிச.15க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? டிச.13ல் முதல்வர் முக்கிய ஆலோசனை!
அதன்படி பிறந்த தேதி தவறாக இருந்தால் மாற்றி கொள்ளலாம், வீட்டு முகவரி மாற்றுதல், புதிய தொலைபேசி எண்ணை மாற்றுதல், புகைப்படம் மாற்றுதல் போன்ற வசதிகள் உள்ளது. இந்த நிலையில் UIDAI-ன் வழிகாட்டுதல்களின் படி, ஆதாரில் உங்கள் பெயரை 2 முறை மட்டுமே மாற்ற முடியும். இதற்கு , வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போன்ற அடையாள சான்றுகள் தேவை. அடுத்ததாக ஆதாரில் பிறந்த தேதியை மாற்றும் வாய்ப்பு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியற்றோர் பட்டியல் – வெளியீடு!
ஆதாரில் உங்கள் பிறந்த தேதியை மாற்ற வேண்டும் என்றால் பாஸ்போர்ட், பான் கார்டு,பள்ளி, கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் போன்ற முதன்மை ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து ஆதாரில் பாலினத்தை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும். பாலின மாற்றம் செய்ய எந்த ஆவணமும் அவசியமில்லை. மேற்சொன்ன விவரங்களை https://ssup.uidai.gov.in/ssup/ என்ற இணையதளத்திற்கு சென்று மாற்றலாம்.