மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – வெளியான ஷாக் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத காலமாக நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இது குறித்து தற்போது முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
DA நிலுவைத்தொகை:
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் விலைவாசியை பொறுத்து ஊதியத்துடன் சேர்த்து அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக அகவிலைப்படியை திடீரென்று நிறுத்தி வைத்தது. இந்த தொகையானது நாட்டின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அதிகரித்த விலைவாசியால் ஊழியர்கள் மீண்டும் அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28% ஆக உயர்த்தப்பட்டது.
கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மே 20ம் தேதி முதல் கோடை விடுமுறை!
அதன் பிறகு 2021 அக்டோபர் மாதம் மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 31% ஆக வழங்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்றனர். இந்த நிலையில் கொரோனா பேரிடர் காலத்தில் 18 மாதமாக வழங்கப்படாமல் இருந்த அகவிலைப்படி தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது விரைவில் அகவிலைப்படி நிலுவைத்தொகை ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் கிட்டத்தட்ட ஒரு நபருக்கு 2 லட்ச ரூபாய் வரை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
ஆனால் இதுவரை அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. கடந்த மாதம் மீண்டும் அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டு 34% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அகவிலைப்படி நிலுவைத்தொகை குறித்து கேள்வி எழுப்பட்ட நிலையில் நிவாரணத்தை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிதி அமைச்சகம் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஓய்வூதியத் துறை அமைச்சக அதிகாரி கூறும்போது ஓய்வூதியதாரர்களின் நலனைக் கவனித்து வருவதாகவும், அவர்களின் குறைகளை பல நிலைகளில் நிவர்த்தி செய்து வருவதாகவும் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.