கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மே 20ம் தேதி முதல் கோடை விடுமுறை!
தெலுங்கானா மாநிலத்தில் ஜூனியர் கல்லூரிகளுக்கு மே 20 முதல் கோடை விடுமுறை தொடங்கும் என கல்வித்துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் 2022-23ம் புதிய கல்வி ஆண்டிற்கான காலண்டரையும் வெளியிட்டுள்ளது.
கோடை விடுமுறை:
நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து வருகின்றது. தற்போது வழக்கத்தை விட அதிக கொடுமையாக வெப்பநிலை நிலவி வருகிறது. இதனால் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுத்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் உள்ள ஜூனியர் கல்லூரிகளுக்கு மே 20ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என கல்வித்துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. ஜூன் 15ம் தேதி மீண்டும் ஜூனியர் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஒரே நாளில் அதிரடியாய் ரூ.288 குறைந்த தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
மேலும் 2022-23 கல்வியாண்டுக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா இன்டர் போர்டு 221 வேலை நாட்களுடன் கல்வியாண்டை அமைத்துள்ளது. வகுப்புகள், தேர்வுகள் மற்றும் விடுமுறைகளுக்கான அட்டவணையை இன்டர் போர்டு அறிவித்துள்ளது. முதல்நிலை வகுப்புகள் ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என்றும், இடைநிலை வகுப்புகள் ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும் என்று இன்டர் போர்டு தெரிவித்துள்ளது. அக்டோபர் 2 முதல் 9 வரை இன்டர் மாணவர்களுக்கு தசரா விடுமுறை என்றும், சங்கராந்தி விடுமுறை ஜனவரி 13 முதல் 15, 2023 வரை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
புதிய கல்வி ஆண்டில் இறுதிக்கட்ட தேர்வுகள் பிப்ரவரி 6 முதல் 13 வரை நடைபெறும். மேலும் நடைமுறைகளுக்கு இடையேயான தேர்வுகள் பிப்ரவரி 20 முதல் மார்ச் 6 வரை நடைபெறும். ஆண்டுக்கு இடையேயான தேர்வுகள் மார்ச் 15 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெறும். அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை. ஜூன் 1ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும். இன்டர் அட்வான்ஸ்டு சப்ளிமெண்டரி தேர்வுகள் மே 2023 கடைசி வாரத்தில் நடைபெறும் என்று இன்டர் போர்டு தெளிவுபடுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இன்டர் போர்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tsbie.cgg.gov.in/ சென்று அறிந்து கொள்ளலாம்.