மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத DA நிலுவை தொகை: 3 தவணைகளாக பிரித்து வழங்க ஏற்பாடு?
மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா கால ஊரடங்கு காலத்தில் 18 மாத அகவிலைப்படி உயர்வானது நிலுவையில் வைக்கப்பட்டு வந்தது. இந்த தொகையை மத்திய அரசு மேலும் தாமதிக்காமல் வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் சார்பில் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
அகவிலைப்படி நிலுவை:
2020 ம் ஆண்டு ஜனவரி முதல் 2021 ஜூன் வரையிலான 18 மாத காலகட்டத்திற்கான மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது கொரோனா கால பொருளாதார சிக்கலை தவிர்க்கும் வகையில் நிலுவையில் வைக்கப்பட்டது. அதன்பிறகு 2021 ஜூலை முதலான DA உயர்வானது சரியான காலத்தில் அறிவிக்கப்பட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், அந்த 18 மாத கால DA நிலுவை மட்டும் இன்னும் ஊழியர்களுக்கு முறையாக அளிக்கப்படவில்லை.
Exams Daily Mobile App Download
சமீபத்தில் 2022 ஜூலை மாத தவணைக்கான அகவிலைப்படி உயர்வானது 34 % ல் இருந்து 4% உயர்த்தி 38% ஆக அறிவிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக நிலுவை தொகைக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், நவம்பர் மாதம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு, விரைவில் 18 மாத DA நிலுவை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது பற்றிய அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு – பேரணியில் நடந்த விபரீதம்!
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத DA நிலுவை தொகையானது, ஊழியர்களின் பணி நிலையை பொறுத்து மாறுபடுகிறது. அதாவது, நிலை-13 அல்லது நிலை-14 ல் உள்ள ஊழியர்களுக்கு நிலுவை தொகையானது ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரையும், நிலை-3 ஊழியர்களுக்கு ரூ.11,880 முதல் ரூ.37,554 வரையும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலுவைத்தொகையானது 3 தவணைகளில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.