பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு – பேரணியில் நடந்த விபரீதம்!
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டின் வாசிராபாதில் பேரணி ஒன்றை நடத்தினார். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக துப்பாக்கி சூடு நடைப்பெற்றது. இதனால் பிரதமர் உட்பட சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
துப்பாக்கி சூடு:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெஹ்ரீக் இ இன்சாப் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இவரது கட்சி கடந்த 2018ம் ஆண்டு பெரும்பான்மை பகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. அப்போது இவர் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றார். கடந்த 2018 முதல் 2022 வரை பிரதமர் பதவியில் இருந்தார். இதற்கிடையில் நிலவிய கொரோனா வைரஸ் தொற்று, பொருளாதார சரிவு போன்ற காரணங்களால் இவரது ஆட்சி சரிந்தது.
Exams Daily Mobile App Download
அதன் பிறகு நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றார். இந்த நிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானில் உள்ள வாசிராபாதில் பேரணி ஒன்றில் பங்கேற்றார். அதாவது பாகிஸ்தானில் தற்போது ஆட்சியில் உள்ள அரசுக்கு எதிராக இந்த பேரணி நடத்தப்பட்டது. இதில் இம்ரான் கான் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கனமழை எதிரொலி.. நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – புதுச்சேரி அரசு அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
அப்போது அங்கு திடீரென துப்பாக்கி சூடு நிகழ்ந்தது. இந்த கலவரத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிற்கு லேசான குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் அவருடன் இருந்த 4 நபர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பாகிஸ்தான் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.