மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பாராத செய்தி – விரைவில் இரட்டை பலன்கள்!
மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து வரும் அறிவிப்புகள் குறித்தான தகவல்கள் வெளியாகி உள்ளது.
சூப்பர் அறிவிப்புகள்:
மத்திய அரசு ஊழியர்கள் தற்போது பெற்று வரும் 46 சதவீத விலைப்படி உயர்வு நடப்பு ஜனவரி முதல் ஜூன் மாதங்களுக்கான DA உயர்வுடன் 50 சதவீதமாக அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. அகவிலைப்படியானது 50 சதவீதத்தை எட்டும் போது மத்திய அரசு ஊழியர்கள் இதனுடன் கூடுதலான பயணப்படி மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற பலன்களையும் பெறுவார்கள்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!
வரும் ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான பலன்கள் குறித்தான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிய வருகிறது. இதனால் மார்ச் மாதத்தில் கூடுதலான சம்பள உயர்வை ஊழியர்கள் பெறுவார்கள் என்பது உறுதியாகிறது. இதனுடன் புதிய பென்ஷன் திட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் இறுதியாக வாங்கிய வருமானத்தில் 40 முதல் 45 சதவீதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.