தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை காலம் இப்போது தான் தொடங்கினாலும் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். இந்நிலையில் இன்று (பிப். 24) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது.
தமிழகத்தில் தட்டச்சு தேர்வு இன்று (பிப்.24) தொடக்கம் – 2 லட்சம் பேர் பங்கேற்பு!
அதன் படி அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அதாவது ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், கடலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.