சிலிண்டர் விலை அதிரடி குறைவு ரூ. 450 மட்டுமே – மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்!
மத்திய பிரதேச மாநிலத்தில் மானிய விலையில் சிலிண்டர் ரூ. 450 க்கு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் சிலிண்டர் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிலிண்டர் விலை:
இந்தியாவில் பல்வேறு கட்ட கோரிக்கைகளுக்கு பிறகு அண்மையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 200 குறைக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது வீடு உபயோக சிலிண்டர் ரூ.900-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல வணிக ரீதியிலான சிலிண்டர் விலை ரூ. 157 குறைந்து ரூ. 1,695-க்கு விற்பனையாகி வருகிறது.
தமிழகத்தில் சொத்து ஆவண பதிவிற்கு இனி இது கட்டாயம் – பத்திரப்பதிவு துறை உத்தரவு!
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மத்திய அரசின் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா மற்றும் மாநில அரசின் முதலமைச்சர் லட்லி பஹ்னா யோஜனா வாடிக்கையாளர்களுக்கு மானிய விலையில் ரூ. 450 க்கு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகையை அரசே செலுத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 ஆம் தேதி தேதியிட்டு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.