தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை அப்டேட் – 74000 போலீசார் நியமனம்!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதை முன்னிட்டு 74000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார்.
போலீஸ் பாதுகாப்பு:
தமிழகத்தில் வருகிற செப் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. மக்கள் பலர் பெரிய பெரிய விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவார்கள். அதனால் விநாயகர் பண்டிகையை முன்னிட்டு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 74,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அனுமதி வாங்கி விநாயகர் சிலையை வைத்து வழிபடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.
மேலும் விநாயகர் சிலை வைக்கும் இடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ஒலிபெருக்கியில் பாடல் ஒளிபரப்ப நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் விநாயகர் சிலைகளை வைத்தால் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.