தமிழகத்தில் சொத்து ஆவண பதிவிற்கு இனி இது கட்டாயம் – பத்திரப்பதிவு துறை உத்தரவு!
தமிழக பத்திரப்பதிவுத்துறையானது இனி சொத்து ஆவண பதிவிற்கு புதிய விதிமுறை ஒன்றை புகுத்தியுள்ளது. புதிய விதிமுறையானது அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு:
தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் தமிழக அரசு தேவைக்கு ஏற்ப செய்து வருகிறது. வளர்ந்து வரும் நவீன காலகட்டத்தில் பத்திரப்பதிவு துறை தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்களும் ஆன்லைன் வாயிலாகவே செய்யப்படும் நடைமுறைகளும் வந்துவிட்டது. இந்நிலையில் பத்திர பதிவுத்துறை செயலாளர் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
செங்கல்பட்டில் உப்பு உற்பத்தியை துவங்க அரசு திட்டம் – 3,010 ஏக்கரில் நிலம் தேர்வு!
அதன்படி அக்டோபர் மாதம் முதல் அனைத்து சொத்து ஆவணங்களும் பதிவுக்கு வரும்போது அந்த சொத்தின் புகைப்படங்கள் அதாவது புவியியல் ஆயங்கள் ( Geo Coordinates ) உடன் ஆவணமாக இணைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். பதிவு துறையில் நடைபெறும் குளறுபடிகளை தடுப்பதற்காக இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.