ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் – மீண்டும் பரவும் கொடிய வைரஸ்!
கொரோனா தொற்றினை விட பெரிய அளவில் வவ்வாலினால் ஏற்படும் பெருந்தொற்று மீண்டும் சீனாவில் இருந்து பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார மையம் தற்போது எச்சரித்திருக்கிறது.
பெருந்தொற்று:
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது வரைக்கும் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றினை ஒழிப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் பல வருடங்களாக முயற்சித்தும் தற்போது வரைக்கும் முழுமையாக கொரோனா தொற்றினை ஒழிக்க முடியாமல் நாள்தோறும் இறப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது மீண்டும் சீனாவில் இருந்து கொரோனாவை காட்டிலும் ஒரு கொடிய நோய் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறது.
BHEL சென்னை வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.82,620/- || தேர்வு கிடையாது!
அதாவது, சீனாவின் தெற்கு எல்லையில் லாவோஸ் தலைநகர் வியன்டியேனை இணைக்கும் வகையில் அதி விரைவு ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த அதி விரைவு ரயில் பாதை சுமார் 422 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள்ளும் வரும் என்பதால் அங்குள்ள காடுகள் அனைத்தும் அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், காடுகளை அளிப்பதன் காரணத்தினால் காடுகளில் இருக்கும் வவ்வால்கள் அனைத்தும் நகரின் உட்பகுதிகளுக்கு வர வாய்ப்பிருக்கிறது.
இந்த வவ்வாலினால் பொதுமக்களுக்கு கொரோனாவை காட்டிலும் கொடிய நோய் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்திருக்கிறது. இதனால், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதா என பொதுமக்கள் பதட்டமடைந்துள்ளனர்.