தமிழகத்தில் மதுக்கடைகள் செயல்படும் நேரம் குறைப்பு – அதிர்ச்சியில் மது பிரியர்கள்!
தமிழகத்தில் மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க பரிசீலனை நடந்து வருகிறது.
மதுக்கடைகள்:
விழுப்புரம் மாவட்டத்தில் விஷம் கலந்த சாராயம் குடித்து 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் மது பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மது கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுக்கடைகளை மூட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் – மீண்டும் பரவும் கொடிய வைரஸ்!
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் அன்று 500 மதுக்கடைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மது கடைகள் செயல்படும் நேரமும் குறைக்கப்படவுள்ளது. அதாவது தற்போது 12 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடைகளை பிற்பகல் 1 மணிக்கு திறக்கவும், இரவு 10 மணிக்கு மூடப்படும் கடைகளை 9 மணிக்கு மூடவும் அரசு ஆலோசனை செய்து வருகிறது.