திருமண பந்தத்தில் இணைந்த CSK வீரர் தீபக் சாஹர் – காதலியை கரம் பிடித்தார்! வைரலாகும் புகைப்படம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தனது நீண்ட நாள் காதலியை நேற்று (ஜூன் 1) கரம் பிடித்துள்ளார். இது தொடர்பான திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தீபக் சாஹர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தனது நீண்ட நாள் காதலியான ஜெயா பரத்வாஜை ஆக்ராவில் உள்ள ஜேபி பேலஸ் ஹோட்டலில் நேற்று (ஜூன் 1) பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண நிகழ்வில் தீபக் சாஹரின் சகோதரர் ராகுல் சாஹர், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் தீபக் சாஹர்-ஜெயா பரத்வாஜ் திருமணத்தில் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
ஆனால் அவர் திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வெள்ளி விழாவைக் கொண்டாடும் நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்துகொள்வதற்கு நேற்று தமிழகம் வந்திருந்தார். இதற்கிடையில் தீபக் சாஹரின் திருமண வரவேற்பு நிகழ்வு இப்போது டெல்லியில் உள்ள கமல் மஹாலில் ஐடிசி மவுரியா ஹோட்டலில் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா உட்பட சிஎஸ்கே மற்றும் இந்திய அணியின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா நான்காவது அலை? அமைச்சர் எழுப்பிய சந்தேகம்! அச்சத்தில் பொதுமக்கள்!
இதற்கிடையில் தீபக் சாஹரின் திருமண விழா கொண்டாட்டம் ‘தி ராயல் கிராண்டியர்’ என்ற பெயரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும் திருமண விழாவிற்கான மெனு விழாவின் மற்றொரு ஈர்ப்பு மையமாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மெனுவில் பாரம்பரிய இந்திய உணவுகள் மற்றும் தென்னிந்திய உணவுகள் இடம்பெற்றிருந்தது. இந்த திருமணம் நடைபெறுவதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தீபக் சாஹரின் சகோதரர் ராகுல் சாஹரும் திருமண பந்தத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.