தமிழக விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு – நவம்பர் 15ம் தேதி வரை கால அவகாசம்!
தமிழகத்தில் விவசாயிகள் 2021-22ம் ஆண்டில் சம்பா, தாளடி, பிசானம் போன்ற நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
பயிர் காப்பீடு:
இந்தியாவில் வேளாண் தொழில் முதன்மை தொழிலாக உள்ளது. ஏராளமானோர் வேளாண் தொழிலை நம்பியே இருக்கின்றனர். வேளாண் தொழிலையும் விவசாயிகளை காக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் புதிய நலத்திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தியும் வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசின் கிசான் திட்டம் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் தவணை முறையில் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த ஆண்டு தனிபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் – முன்னாள் முதல்வர் கோரிக்கை!
மேலும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த டிசம்பர் மாதமும் தொடர் மழை நீடிக்கும். இதனால் பயிர்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் இயற்கை பேரிடரால் பயிர்கள் சேதமடையும் நிலையில் பயிர் காப்பீடு செய்யப்பட்டிருந்தால் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
உடனடியாக பர்சனல் மேரேஜ் லோன் பெறுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!
இந்த நிலையில் 2021-22ம் ஆண்டில் சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர்களை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுவரை பயிர் காப்பீடு செய்யாதவர்கள் நவம்பர் 15க்குள் காப்பீடு செய்ய வேளாண் உற்பத்தி ஆணையர் அறிவுரை வழங்கியுள்ளார். பயிர் காப்பீடு செய்வதன் மூலம் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விவசாயிகள் விடுபடலாம்.