அஞ்சல் துறையின் அசத்தல் திட்டம் – சிறந்த லாபத்துடன் மாதம் ரூ. 2,512 ஓய்வூதியம்!
இந்திய அஞ்சல் துறை மக்களை சேமிக்கத் தூண்டும் வகையில் ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றான மாதந்தோறும் வருமானம் அளிக்கக்கூடிய லாபகரமான திட்டம் குறித்து இப்பதிவில் காண்போம்.
மாதாந்திர வருமான திட்டம்:
மக்கள் தற்போது பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அதே சமயம் நல்ல வட்டி விகிதமும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். தற்போதைய சூழலில் எப்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும், ஊரடங்கு விதிக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் பங்கு சந்தைகளில் முதலீடு செய்ய மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
தற்போது பண பாதுகாப்பு மற்றும் லாபத்தை பெற நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் சிறந்த தேர்வாகும். குறிப்பாக அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் போது உங்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 2,512 கிடைக்கும். இத்திட்டத்தில் ஒரு தனி நபர் கணக்கு தொடங்கி அதிகபட்ச 4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மேலும் கூட்டு கணக்கு தொடங்கும் வாய்ப்பும் இந்த திட்டத்தில் உண்டு.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் மழை – இந்த மாவட்ட மக்களே உஷார்!
Follow our Instagram for more Latest Updates
இந்த கூட்டு கணக்கில் நீங்கள் 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதில் ஆண்டுக்கு 6.7% வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வட்டி தொகையானது ஒவ்வொரு மாதமும் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஒரு நபர் மாத வருமான திட்டத்தில் சேர்ந்து தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ரூ.4,50,000 தொகையை முதலீடு செய்து வந்தால் அந்த நபர் முதிர்வு காலத்தின் போது மாதந்தோறும் ரூ. 2,512 கிடைக்கும். ஒரு ஆண்டுக்கு கணக்கிட்டால் ரூ.30,144 மொத்த வருமானம் கிடைக்கும்.