பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் ஓய்வு வயது விவகாரம் – கேரள அரசின் முடிவு!
கேரளா மாநிலத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது முன்னதாக 60 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் மாநில அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
ஓய்வு வயது:
படித்த பட்டதாரி இளைஞர்கள் பலர் அரசு வேலைக்கு காத்திருக்கும் நிலையில், கேரளா மாநிலத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது முன்னதாக 60 ஆக உயர்த்தப்பட்டது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, நிபுணர்கள் குழுவின் வழிகாட்டுதலின் பேரில் தான் இந்த முடிவை முன்னதாக அறிவித்தது.
Exams Daily Mobile App Download
ஆனால், மாநில அரசின் இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வந்தனர். எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக அரசு இந்த முடிவை எதிர்த்து கண்டனங்கள் தெரிவித்து வந்தன. அத்துடன், இந்த அறிவிப்பை கேரளா அரசு திரும்ப பெறவும் வலியுறுத்தி வந்தது. இதனால் பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு வயதை 60ல் இருந்து மாற்றுவதற்கு மாநில அமைச்சரவையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அஞ்சல் துறையின் அசத்தல் திட்டம் – சிறந்த லாபத்துடன் மாதம் ரூ. 2,512 ஓய்வூதியம்!
Follow our Instagram for more Latest Updates
அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வு கால வயது 60ல் இருந்து திரும்ப பெறப்படுவதாக முதல்வர் தற்போது அறிவித்துள்ளார். மேலும், இதை பற்றிய விவரங்கள் அனைத்தும் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.