தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் மழை – இந்த மாவட்ட மக்களே உஷார்!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் மழை - இந்த மாவட்ட மக்களே உஷார்!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் மழை - இந்த மாவட்ட மக்களே உஷார்!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் மழை – இந்த மாவட்ட மக்களே உஷார்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது வெளியான வானிலை ஆய்வு மைய அறிக்கையின் படி, 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மழைக்கு வாய்ப்பு:

தென்தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாகவும், வடகிழக்கு பருவமழை காரணமாகவும் இன்று (நவ. 3) முதல் அடுத்த 4 நாட்களுக்கு ( 04.11.2022 முதல் 7.11.2022) மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (03.11.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ கனமழைக்கு பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் செங்கல்பட்டு, கடலூர்‌, விழுப்புரம்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்‌சிராப்பள்ளி, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, விருதுநகர்‌, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கு ஆப்பு வைத்த காவல் துறை – வாகனங்கள் இனி ஏலம்!

Follow our Instagram for more Latest Updates

அது மட்டுமில்லாமல் மயிலாடுதுறை, சிவகங்கை, நாகப்பட்டினம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, புதுக்கோட்டை,இராமநாதபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌ கடலூர்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்‌சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திருநெல்வேலி, திண்டுக்கல்‌, விருதுநகர்‌, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌ எனவும் இடிமின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!