இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 16,047 பேருக்கு தொற்று!
உலகம் முழுவதும் தலைகீழாக மாற்றி நாட்டில் பெரிய மாற்றத்தையும், உயிர் சேதத்தையும் கொடுத்த கொரோனா வைரஸ் இந்த ஆண்டு மீண்டும் தலைதூக்கி தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்துக்குள் நாட்டில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தோர் மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை விவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கொரோனா நிலவரம் :
அனைத்து மக்களுக்கும் இருக்க கூடிய ஒரு பொதுவான பேராசையே நோய் நொடியில்லா வாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான். அப்பேற்பட்ட உயிருக்கு ஒரு பாதிப்பு உண்டாகிறது என்றால் யாராயினும் பயப்படத்தான் செய்வார்கள். அந்த பயத்தை மக்களுக்கு ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பல மனிதர்களின் வாழ்க்கையை திருப்பி போட்டுள்ளது. கடந்த 2 வருட காலமாக கொரோனா என்ற பெரு நோய் தொற்று பாரபட்சம் பார்க்காமல் எல்லோரையும் ஆட்டி படைத்து பல உயிர் சேதங்களையும், பொருளாதார வறுமையையும் ஏற்படுத்தியது.
Exams Daily Mobile App Download
அதன் பிறகு நடப்பு ஆண்டில் தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்தாலும், மீண்டும் உருவெடுத்து பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்திற்குள் நாட்டில் கொரோனா பாதிப்பு 4 கோடியை தாண்டியுள்ளது. மேலும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி தற்போது கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது, புதிதாக 16,047 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 4,41,90,697ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து விடுமுறை அறிவிக்க வேண்டாம் – கேரளா மாணவியின் கோரிக்கை
இதை தொடர்ந்து, புதிதாக 54 பேர் இறந்துள்ளதால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,826ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 19,539 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,35,35,610 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.52% அதிகமாகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.19% குறைவாகவும் உள்ளதை காணமுடிகிறது. மேலும், சிகிச்சை பெறுவோர் விகிதமும் 0.29% ஆக குறைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இதுவரை 2,07,03,71,204 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 15,21,429 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.