தொடர்ந்து விடுமுறை அறிவிக்க வேண்டாம் – கேரளா மாணவியின் கோரிக்கை!

0
தொடர்ந்து விடுமுறை அறிவிக்க வேண்டாம் - கேரளா மாணவியின் கோரிக்கை!
தொடர்ந்து விடுமுறை அறிவிக்க வேண்டாம் - கேரளா மாணவியின் கோரிக்கை!
தொடர்ந்து விடுமுறை அறிவிக்க வேண்டாம் – கேரளா மாணவியின் கோரிக்கை!

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால், மாணவ மாணவியர் விடுமுறையை என்ஜாய் செய்வதுதான் வழக்கம், ஆனால், ஒரு மாணவி, எல்லாரும் விடுமுறையை கொண்டாட மாட்டார்கள் என்பதை நிரூபித்துள்ளார். “அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்க வேண்டாம்” என மாவட்ட ஆட்சியரிடம், மாணவி ஒருவர் வேண்டுகோள் விடுத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கிய கோரிக்கை:

கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களில் பள்ளிகள் சரியாக திறக்கப்படாமல் இருந்தது. மேலும் தடுப்பு நடவடிக்கைகள் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன்புதான் பள்ளிகள் திறக்கப்பட்டன, இதையடுத்து அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், பொதுத் தேர்வும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா அச்சம் காரணமாக விடப்பட்ட நீண்டநாள் விடுமுறையால், பல மாணவர்களுக்கு கற்றலில் பெரும் இடைவெளி ஏற்பட்டது. இதை சரி செய்ய மாநில அரசுகள் பல நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதனால் கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இடைவிடாது பெய்த கன மழையால் நீர் நிலைகள் நிரம்பி வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வயநாட்டில் கனமழை காரணமாக வார விடுமுறைக்குப் பின், நேற்று முன்தினமும், நேற்றும், மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்ததால், தொடர்ந்து நான்கு நாட்கள் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை.

Whatsapp பயனர்களுக்கான புதிய அப்டேட் – ஆன்லைனில் இருப்பதையும் மறைக்கும் வசதி

இதையடுத்து, சபூரா நவுஷத் என்ற 6ம் வகுப்பு மாணவி, ‘இன்றைக்கும் விடுமுறை அறிவித்து விட வேண்டாம்; தொடர்ந்து நான்கு நாட்கள் வீட்டில் இருப்பது கஷ்டமாக இருக்கிறது’ என மாவட்ட கலெக்டர் கீதாவுக்கு ‘இ – மெயில்’ அனுப்பினார். இந்த இ – மெயிலை பார்த்த , கலெக்டர் மாணவியை வாழ்த்தியதுடன், அந்த மெயிலை தன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்கில் பகிர்ந்தார். இந்நிலையில், அந்த மாணவியின் கோரிக்கை இணையத்தில் வேகமாக பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!