தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மீண்டும் ஊரடங்கு! அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா என்பது குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முழு ஊரடங்கு அமல்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து நிலைமை இயல்பு நிலைக்கு வந்தது. அதனால் சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 2500யை நெருங்கி இருக்கிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 5 சதவிகிதம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 94.68 சதகிதமும், 2ம் தவணை தடுப்பூசி 85.47 சதவிகிதமும் செலுத்தப்பட்டுள்ளது.
TN TET தேர்வு குறித்த பயம் இனி இல்லை – நாளை (ஜூலை 29) மாதிரி தேர்வு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். அதனால் ஊரடங்கு இப்போதைக்கு தேவை இல்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் தமிழகத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் ஊரடங்கு என்ற பேச்சிற்கு இடமில்லை எனவும், நிலைமை மாறுவதை பொறுத்து ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்.