இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு – ஷாக் ரிப்போர்ட்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு தடுப்பு பணிகள் எடுக்கப்பட்ட போதிலும் கொரோனா வைரஸ் தொற்று முற்றிலுமாக குறைந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தற்போது வரை கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் புதிதாக 6,093 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,84,729 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 68 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,556 ஆக உயர்ந்துள்ளது. மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 4,39,06,972 ஆகவும் அதன் விகிதம் 98.70 % ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்கும் நடவடிக்கையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு துறைகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு – புதிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
இதுவரை இந்தியாவில் 2,10,02,40,361 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்த பிறகு கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதனால் மக்கள் காலம் தாழ்த்தாமலும், அலட்சியம் காட்டாமலும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,09,189 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்