தமிழக அரசு துறைகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு – புதிய உத்தரவு!
தமிழக அரசு துறை பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி திருத்தம் செய்ய வேண்டும் என தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது
பெண்களுக்கு இடஒதுக்கீடு:
தமிழக மக்கள் மத்தியில் அரசு பணி என்பது மிகவும் விருப்பமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என பல முயற்சிகளை அரசு செய்து வருகிறது. அதன் படி கடந்த 2016 ஆம் ஆண்டு அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டமானது இயற்றப்பட்டது. இந்த சட்டம் மூலமாக அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவிகித இடங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏகப்பட்ட பெண்கள் பலன் பெறுகின்றனர். இந்த சட்டத்தின் படி 30 சதவிகித இடம் போக மீதமுள்ள 70 சதவிகித இடங்களில் பெண்கள் போட்டி போடவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. அதனால் பெண்களுக்கான இந்த 30 சதவிகித சட்டத்திற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் இருக்கிறது.
மேலும் இது குறித்து நீதிமன்றத்தில் ஏகப்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமா்வு கூறுகையில், ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் படி பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கிவிட்டு, அதன் பின்னர் கூட சமுதாய ரீதியிலான இடஒதுக்கீட்டை பின்பற்றுவது சரியானது இல்லை. இந்த முறையானது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது.
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம் – சூப்பர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
ஆனாலும் இந்த நடைமுறைப்படி ஏற்கனவே வழங்கப்பட நியமனங்களை ரத்து செய்வது சரியானது இல்லை. அது மட்டுமில்லாமல் தகுதி அடைப்படையில் வழங்கப்படும் பணிநியமனம் உரிமையை மறுக்கவும் முடியாது என தெரிவித்துள்ளனர். அதனால் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவித்தது போல பெண்களுக்கான இடஒதுக்கீடு முடித்துவிட்டு அதன் பின் சமூகரீதியிலான இடஒதுக்கீட்டு அடிப்படையிலும் நிரப்பி விட்டு அதன் பின் காலியாக இருக்கும் இடங்களின் அடிப்படையில் பெண்களை நிரப்ப வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர், மேலும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ஏற்ப எதிா்காலத்தில் தோ்வு நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்