தமிழகத்தில் பொது இடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி கட்டாயம் – அரசு முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் கடைகள் என அனைத்து பொது இடங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலின் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் அதனை கட்டுப்படுத்தும் விதமாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவெடுக்கப்பட்டது. அதனால் உலகின் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வந்தன. அதனை தொடர்ந்து இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. அதில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஆனாலும் கிராமப்புறத்தில் இருக்கும் மக்கள் சிலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிரமப்பட்டு வந்தனர்.
புதிய கண்ணம்மா வினுஷாவுடன் இணைந்த பாரதி – வெளியான புகைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
அவர்களது சிரமத்தை போக்கும் விதமாக கிராமப்புற பகுதிகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த இரண்டு மாத காலமாக கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அதில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். அதனால் தற்போது தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு விட்டன.
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
ஆனாலும் கொரோனா தொற்று இன்னும் முற்றிலும் அகலவில்லை என்பதனால் தமிழக அரசு அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையே கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பள்ளிகள், கல்லூரிகள், கடைகள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதி வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. எனவே அனைத்து பொது இடங்களிலும் சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.