தமிழகத்தின் 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
வட தமிழகப் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த நிலையில் தமிழகத்தில் இன்று (நவம்பர் 20) 10 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி வட தமிழகப் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக குறிப்பிட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக இன்று (நவம்பர் 20) 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பாக்கியா வீட்டிற்கு வரும் ஜெனி, சந்தோசத்தின் உச்சியில் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
அதன் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் பளளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூரில் பொதுத்தேர்வு நடைபெற இருக்கும் சிபிஎஸ்இ பள்ளி தவிர, மற்ற பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த ஏபி டி வில்லியர்ஸ் – ரசிகர்கள் அதிர்ச்சி!
கனமழை காரணமாக பள்ளி கல்லூரிக்களுக்குள் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மழையின் அளவை பொறுத்து இன்னும் சில மாவட்டங்களில் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பல ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் சமீபத்தில் தான் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது மழை காரணமாக தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் பெரும் சிரமத்தில் இருக்கின்றனர்.