கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் தளர்வு.. இயல்பு நிலைக்கு திரும்பும் சீனா!
சீனாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வந்த நிலையில், அரசின் தீவிர முயற்சியின் காரணமாக தற்போது பாதிப்புகள் குறைந்துள்ளது.
கொரோனா பரவல்:
உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா தொற்று அதன் பிறப்பிடமான சீனாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. மற்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்த போதிலும், சீனாவில் நாளுக்கு நாள் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வந்தது. இதனால் சீன அரசு ஜீரோ கோவிட் கொள்கையை அறிமுகம் செய்தது. இதனால் தீவிரமாக கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.
பேருந்து தொழிலாளர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தம்.. ஸ்தம்பித்த மாநிலம் – வலுக்கும் கோரிக்கை!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதன் விளைவால் சில நாட்களாக கொரோனா தொற்று உறுதி எண்ணிக்கை குறைந்து வந்தது. மேலும், கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு முடிவு செய்து அறிவித்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட அப்போது இறப்பு எண்ணிக்கை எதுவும் பதிவாகவில்லை. இதனை தொடர்ந்து சீனா அதன் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. குறிப்பாக, நாட்டில் உள்ள 60 வயதுக்கு மேலானவர்களில் 87% பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 66.4% பேர் முழுமையான தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.