பேருந்து தொழிலாளர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தம்.. ஸ்தம்பித்த மாநிலம் – வலுக்கும் கோரிக்கை!

0
பேருந்து தொழிலாளர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தம்.. ஸ்தம்பித்த மாநிலம் - வலுக்கும் கோரிக்கை!
பேருந்து தொழிலாளர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தம்.. ஸ்தம்பித்த மாநிலம் - வலுக்கும் கோரிக்கை!
பேருந்து தொழிலாளர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தம்.. ஸ்தம்பித்த மாநிலம் – வலுக்கும் கோரிக்கை!

பஞ்சாப் மாநிலத்தின் பேருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 3 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலைநிறுத்தம்:

அரசு துறைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் ஒப்பந்த ஊழியர்களை அரசு பணியமர்த்தி வருகிறது. நிரந்தர அரசு ஊழியர்களுக்கு அளிக்கும் சலுகைகள் அளவிற்கு ஒப்பந்த ஊழியர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. அவர்களுக்கான பலன்கள் குறித்து அடிக்கடி இருதரப்பினருக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வரும். இதற்காக பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், பஞ்சாப் மாநில ரோடுவேஸ் மற்றும் PEPSU சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (PRTC) ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை தற்போது முன்வைத்துள்ளனர். இதனை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, 28 ஓட்டுனர்களை அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் தொடர்ந்து 3 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஜன.2 அன்றும் விடுமுறை.. பள்ளிகள் அரையாண்டு விடுமுறை முடிந்து திறப்பதில் குழப்பம்!!

Follow our Instagram for more Latest Updates

இதனால், பணிக்கு செல்லும் ஊழியர்கள் பலரும் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும், அரசுக்கு இதனால் சுமார் ரூ.4 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தற்போது அம்மாநிலத்தில் 50% பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!