மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – ஊரடங்கு அமல்! பிரதமர் முடிவு!

0
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா - ஊரடங்கு அமல்! பிரதமர் முடிவு!
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா - ஊரடங்கு அமல்! பிரதமர் முடிவு!
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – ஊரடங்கு அமல்! பிரதமர் முடிவு!

உலகம் முழுவதும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து நாட்டு அரசுகளும் பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

ஊரடங்கு:

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்தது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கை விதித்தது. மேலும் பொதுமக்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடைபெற்றது. இந்த தடுப்பூசியின் விளைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சரியத் தொடங்கியது.

Exams Daily Mobile App Download

ஒரு வழியாக நாம் கொரோனாவிலிருந்து மீண்டு விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. அந்நாட்டின் பெய்ஜிங், நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பீஜிங்கில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அனைத்து பொது இடங்களுக்கும் பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நகர மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அந்த வகையில் தற்போது நியூசிலாந்து நாட்டில் முதன் முறையாக ஒமைக்ரான் பிஏ.2.75 வகையைச் சேர்ந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை கிடையாது? அரசு அறிவிப்பு!

இது பிஏ 2 வகையின் திரிபான பிஏ.2.75 வைரஸ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 9,802 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 22 பேர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது . தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பிரதமர் உயர் மட்டக் குழுவுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நியூசிலாந்து நாட்டில் குளிர் காலம் தொடங்கி உள்ளதால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!