தமிழக மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை கிடையாது? அரசு அறிவிப்பு!
அரசு பள்ளியில் பயின்று மேற்படிப்பு படிக்க நினைக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை இந்த மாதத்தில் இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த மாதத்தில் உதவித்தொகை கிடைக்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரூ.1000 உதவித்தொகை:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த உதவித்தொகை மாணவிகளின் வங்கி கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உதவித்தொகை பெறுவதற்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்று, புதிதாக சேர்ந்துள்ள கல்லூரியின் அடையாள அட்டை, ஆதார் எண், வங்கி கணக்கு முதலான ஆவணங்களை ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், தகுதியுள்ள மாணவிகள் தங்களது கல்லூரிகள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது வரைக்கும் 2.2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், ஜூலை 15 ஆம் தேதியில் இருந்தே மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டுவிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பெற்றோர்கள் உதவித்தொகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தள்ளி வைப்பு? முக்கிய அறிவிப்பு!
அதாவது, அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு இந்த மாதத்தில் இருந்து உதவித்தொகை வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படியும் ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதத்தின் இறுதியில் தான் உதவித்தொகை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அரசின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.