தமிழகத்தில் மீண்டும் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்? முதல்வர் ஆலோசனைக்கு பின் தகவல்!
தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் இன்னும் உயர்வடைந்தால் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்
கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் புதிய கொரோனா பாதிப்புகள் புதிய அலைக்கான ஆரம்பமாக கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு வரும் கொரோனா புதிய பாதிப்புகள் இப்போது 20 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்திலும் கூட கொரோனா நோய்த்தொற்றின் தினசரி எண்ணிக்கை தற்போது 2 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்புகள் நூற்றுக்கணக்கில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று (ஜூலை 1) முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் தற்போதைய வேகம் குறித்தும், அதை தடுக்கும் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – அரசு அதிரடி!
மேலும், தற்போது வரை மாநிலம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் 5% இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை உயரும் பட்சத்தில் கொரோனா தடுப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் உச்சம் தொட்டு பின்பு குறையும் என்றும் இப்போது வரை தொற்று பாதிப்பு குறைவாக இருப்பதாகவும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் தாக்கம் குறைவாக இருப்பதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.