தமிழக பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – அரசு அதிரடி!
கொரோனா பரவல் தமிழகத்தில் தீவிரமடைவதை தொடர்ந்து இன்று முதல் மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து தான் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சில புதிய கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அரசும் முடிந்த அளவுக்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருந்தாலும் கூட தொற்றின் பரவல் குறைவதாக இல்லை. மேலும், கொரோனா பாதிப்புக்களால் உயிரிழப்புகள் பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு ரூ.500 வரைக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஒரு பள்ளி குழந்தைகக்கு தொற்று பரவ ஆரம்பித்தாலே அனைத்து குழந்தைகளுக்கும் பரவி விடும். இதனால், இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதே அவர்களின் வெப்பநிலையை கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு கூறியதால் ஒரு இரண்டு நாட்களுக்கு மட்டும் வெப்பநிலை கண்காணித்துவிட்டு அதற்கு பிறகு அப்படியே விட்டுவிடக் கூடாது எனவும் எச்சரிக்கைப் படுத்தப்பட்டுள்ளது.
TCS iON நிறுவனத்தில் சூப்பர் வேலை அறிவிப்பு – ஊதியம் 4,00,000/-|| விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேலும், அனைத்து பள்ளி நிர்வாகங்களும் மாணவர்களின் அக்கறையில் பங்கெடுத்து அரசு அறிவித்துள்ள இந்த நடவடிக்கைகளை பின்பற்றும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், மாணவர்களை அவ்வப்போது கைகளை கழுவி சுத்தமாக இருக்க பழக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும், ஒரு மாணவனுக்கு காய்ச்சல், இருமல் ஆகிய அறிகுறிகள் இருந்தாலும் கூட தனிமைப்படுத்தும்படி சுகாதாரத்துறை பள்ளி நிர்வாகங்களுக்கு எச்சரித்துள்ளது. இது மட்டுமல்லாமல், பல மாணவர்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.