முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் இன்று நடைபெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்க உள்ளார்.
கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பின் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா 3ம் அலைப்பரவல் பாதிப்புகளை அடுத்து நோய்த்தடுப்பு தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் திரும்ப பெற்றது. இதையடுத்து மக்கள் மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வந்துகொண்டிருக்கும் இந்த சூழலில் மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா புதிய பாதிப்புகள் உயர்வடைய ஆரம்பித்தது. இதனால் மக்கள் அனைவரும் மீண்டும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வந்தது.
Exams Daily Mobile App Download
இருப்பினும், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கை தற்போது 10,000ஐ நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று (ஜூன் 22) கொரோனா தொற்றுக்கு எதிராக நேர்மறை சோதனை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், ‘மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – நாளை பள்ளிகள் திறப்பு!
இருப்பினும் அவர் இன்று (ஜூன் 22) நடைபெற இருக்கும் மாநில அமைச்சரவை கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்பார்’ என்று கூறியுள்ளார். இப்போது மஹாராஷ்டிரா மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடியின் உச்சக்கட்டத்தில், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்னதாக அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.