12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – நாளை பள்ளிகள் திறப்பு!

0
12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - நாளை பள்ளிகள் திறப்பு!
12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - நாளை பள்ளிகள் திறப்பு!
12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – நாளை பள்ளிகள் திறப்பு!

புதுவை, காரைக்காலில் கோடை விடுமுறைக்கு பின்னர் 1 முதல் 10ம் வகுப்பு வரை மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க உள்ளது. இதனால் மாணவர்கள் பாதுகாப்புக்காக, வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் கொரோனா விதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

நாளை பள்ளிகள் திறப்பு:

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 வருட கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கற்றல் முறையில் இடைவெளி ஏற்பட்டது. மேலும் நோய் பரவல் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் வந்ததால், பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து கோடை வெயில் காரணமாக மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, கடந்த ஜூன் 13ம் தேதி திறக்கப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் புதுவையில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டது. மேலும் இந்த தேர்வுகள் முடியும் முன்னதாக 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் “பாஸ்” என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் 12ம் வகுப்பு , 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இந்த நிலையில், புதுவை, காரைக்காலில் கோடை விடுமுறைக்கு பின்னர் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மற்றும் 12ம் வகுப்புக்கு நாளை (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. எனவே பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகளில் கல்வித்துறை ஈடுபட்டு உள்ளது.

கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் ஒத்திவைப்பு? ரிசர்வ் வங்கி விளக்கம்!

இதன் அடிப்படையில் பள்ளி, வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டு, மாணவர்களின் வருகையை எதிர்நோக்கியுள்ளன. கட்டிடங்களில் பழுதுகளும் சீரமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகளில் எலக்ட்ரானிக்ஸ் சாதனைங்கள் முறையாக செயல்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன. இதையடுத்து பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பணிகளை ஆய்வு செய்தார். பள்ளி மாணவர்களுக்கு நாளை முதலே பாட புத்தகம், சீருடை வழங்கவும், சிறப்பு பஸ்களை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையே பிளஸ்-1 வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூலை) 11ம் தேதி முதல் முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட்டு வருகிறது. SSLC தேர்வு முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில் பிளஸ்-1 வகுப்புகளில் சேர மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து விண்ணப்பங்களை அரசு பள்ளிகளில் வாங்கி செல்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!