நாடு முழுவதும் கொரோனா மருந்து பொடி 2DG விற்பனை – இன்று முதல் தொடக்கம்!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா நோய்க்கு தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG பொடி மருந்து சந்தையில் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா மருந்து:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இருந்த போதிலும் கடந்த வாரத்தை விட தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2.11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் 3,847 பேர் இறந்துள்ளனர். இதனால் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 20,26,95,874 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஊதியம் இல்லை – அரசு அதிகாரி அறிவிப்பு!!
இந்நிலையில் கொரோனா நோய்க்கான தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG பொடி மருந்து சந்தையில் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும் அவர் 10 ஆயிரம் 2DG கொரோனா மருந்து பாக்கெட்டுகள் இன்று முதல் சந்தையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.