தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஊதியம் இல்லை – அரசு அதிகாரி அறிவிப்பு!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் வழங்கப்படாது என மாநில பழங்குடி நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை தீவிரமடைந்து வரும் சூழலில் மத்திய அரசு தடுப்பூசி போடும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த முகக்கவசம், சமூக இடைவெளி ஆகிய தடுப்பு நடவடிக்கைகளோடு தடுப்பூசிகளும் முக்கியம் என மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த காரணத்தால் மாநிலங்கள் தோறும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் செலுத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தற்போது மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என மாநில பழங்குடி நலத்துறை அதிகாரி அறிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் காவுரெலா பெந்திரா மார்வாஹி மாவட்டத்தில் உதவி ஆணையாளராக இருந்து வருபவர் கே.எஸ் மஸ்ராம்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் – தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு!!
அவர் அம்மாவட்டத்தில் உள்ள பழங்குடி நலத்துறை அலுவலகங்கள், ஆசிரமங்கள், விடுதிகளில் பணிபுரியும் அதிகாரிகள் உட்பட மற்ற அனைத்து ஊழியர்களின் தடுப்பூசி போட்ட விவரங்களை சமர்ப்பிக்கும் படி கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்திகொள்ளாத ஊழியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் வழங்கப்படாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக அனைத்து நிர்வாக அலுவலர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், இருப்பினும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருந்தவர்களுக்கு இத்தகைய அறிவிப்புகளை கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.