தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் – தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக மாவட்ட அளவிலான திருப்புதல் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்புதல் தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 11ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே 5ம் தேதி பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தாக்கம் அதிக அளவில் இருந்ததால் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் குறைந்த பிறகு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்துவதற்கான வரைவு விதிகள் தயார் செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பள்ளிகள் அளவில் அலகு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாணவர்கள் தங்களின் பாடங்களை மறந்து விடாமல் இருப்பதற்காக இதற்கு முன்னர் 2 முறை திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டது.
இந்தியாவில் முடக்கப்படுமா பேஸ்புக், ட்விட்டர்? அதிகாரி விளக்கம்!!
தற்போது அனைத்து பாடங்களையும் இணைத்து மாவட்ட அளவிலான பொது வினாத்தாளுடன் மாதிரி தேர்வுகளை நடத்துமாறு மாவட்ட கல்வி அலுவலகங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வாட்ஸ்ஆப் வழியே தகவல் அனுப்பியுள்ளது. மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகும் விதத்திலும், பாடங்களை நினைவுபடுத்தும் விதத்திலும், தேர்வு குறித்த அச்சம் நீங்கும் வகையிலும் மாதிரி தேர்வுகள் நடப்பட்ட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.