தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிப்பு – 11 மாவட்டங்களில் மட்டும்!
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் சூழலை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற ஜூன் மாதம் 28ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். இதன் காரணமாக குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம்:
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி முதல் 27 மாவட்டங்களில் கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் வர தொடங்கின. இதன் காரணமாக குறிப்பிட்ட 27 மாவட்டங்களில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. அதே நேரத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தொற்று தற்போது வரை கட்டுக்குள் வரவில்லை. இதன் காரணமாக இந்த 11 மாவட்டங்களில் தொடர்ந்து கடும் ஊரடங்கு ;கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
ஜூன் 24 முதல் மதுபான கடைகள் மூடல், வழிபாட்டு தலங்கள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இதன் காரணமாக 11 மாவட்டங்களில் மக்கள் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 11 மாவட்டங்களில் மக்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற 28ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். இதன் காரணமாக பாதிப்பு அதிகமாக 11 காணப்படும் மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதுகுறித்து வெளியான அறிக்கையில் தெரிவித்ததாவது, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் ஏற்கனவே அறிவித்தபடி BMC எனப்படும் முந்தைய மாத கணக்கீட்டு முறையை பின்பற்றி மின் கட்டணம் செலுத்தலாம். அதாவது ஜூன் 15 முதல் 30 வரையிலான காலத்திற்கான மின் கட்டணத்திற்கு கடந்த 2020 ஜூன் மாதத்திற்கான மின்கட்டணத்தை செலுத்தலாம். இந்த கட்டணம் அதிகம் என்று கருதுபவர்கள் 2021 ஏப்ரல் மாதத்திற்கான மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த அறிவிப்பு பாதிப்புகள் குறைவாக காணப்படும் 27 மாவட்டங்களுக்கு பொருந்தாது என்றும் அவர்களுக்கு கால அவகாசம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.