ஜூன் 24 முதல் மதுபான கடைகள் மூடல், வழிபாட்டு தலங்கள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று நிலவரத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு கேரள மாநில அரசு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து உள்ளது. அதன்படி நாளை (ஜூன் 24) முதல் வழிபாட்டு தலங்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளில் மேலும் தளர்வுகளை அறிவித்தார், அதே நேரத்தில் தொற்றுநோயின் மூன்றாவது அலை தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். அதன்படி புதிய தளர்வுகள் ஜூன் 24 (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும். கேரளாவில் கடந்த மூன்று நாட்களாக சராசரியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் (டிபிஆர்) 10.2 சதவீதமாகும். திருச்சூர் மாவட்டம் மிக உயர்ந்த டிபிஆர் 12.6 சதவீதமாகவும், கண்ணூர் மாவட்டத்தில் மிகக் குறைந்த அளவு 7.8 சதவீதமாகவும் உள்ளது.
ஜூலை 1 முதல் பேருந்துகள் இயக்கம், இ-பாஸ் முறை ரத்து – மாநில அரசு அறிவிப்பு!
புதிய வழிகாட்டுதல்களின்படி,
- வங்கிகள் இப்போது செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் செயல்பட அனுமதிக்கப்படும், ஆனால் பொதுமக்கள் வங்கிக் கிளைகளை நேரடியாக அணுக முடியாது.
- வகை A மற்றும் B பகுதிகளில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் 50 சதவீத ஊழியர்கள் உடன் செயல்பட அனுமதிக்கப்படும். வகை C இல் 25 சதவீத ஊழியர்களைக் கொண்டு நிறுவனங்கள் செயல்படலாம்.
- ஒரு நேரத்தில் அதிகபட்சம் 15 நபர்களுடன் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
- தமிழ்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள மதுபானக் கடைகள் மூடப்படும்.
- மாநிலம் முழுவதும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
- தடுப்பூசி போடப்பட்டதால் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 1 முதல் தொடங்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 12,617 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. 141 இறப்புகளும் உறுதி செய்யப்பட்டன. இதன் மூலம் இறப்பு எண்ணிக்கை 12,295 ஆக உள்ளது. தற்போது, கேரளாவில் 1,00,437 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.