அடுத்த 2 மாதங்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு ஆலோசனை!
கர்நாடகா மாநிலத்தில் தற்போது தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றின் புதிய பாதிப்புகள் காரணமாக அடுத்த 2 மாதங்களுக்கு முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை தொற்று முடிவை எட்டியிருக்கும் நிலையில் தற்போது கொரோனா 3ம் அலைக்கான முன் எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேற்கத்திய நாடுகளில் பரவி வரும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் அச்சம் இந்தியாவிலும் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் மைசூர், தார்வாட் மற்றும் பெங்களூரு போன்ற கர்நாடகா மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டு வரும் புதிய கொரோனா பரவல் வழக்குகளின் எண்ணிக்கையை தொடர்ந்து முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் விளக்கம்!
அந்த வகையில் அடுத்த 2 மாத காலத்திற்கு கல்வி நிறுவனங்களில் பூட்டுதல் போன்ற கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனையில் ‘கல்வி நிறுவனங்களில் அனைத்து சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகள், மாநாடுகள், கருத்தரங்குகள், கல்வி நிகழ்வுகள் போன்றவை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களின் படி, மருத்துவம், பாராமெடிக்கல் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து மாணவர்களும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.
சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் – கனமழை எதிரொலி!
அறிகுறிகள் தென்பட்டால் உடனே சிகிச்சை அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகா கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட 281 பேருக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டதையடுத்து இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி மாணவர்கள், கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஓட்டல் ஊழியர்கள், கேட்டரிங் ஊழியர்கள் ஆகியோருக்கு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ரேண்டம் சோதனை நடத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.