நாடு முழுவதும் வேகமெடுக்கும் கொரோனா – மீண்டும் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்! அரசு திடீர் உத்தரவு!

0
நாடு முழுவதும் வேகமெடுக்கும் கொரோனா - மீண்டும் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்! அரசு திடீர் உத்தரவு!
நாடு முழுவதும் வேகமெடுக்கும் கொரோனா - மீண்டும் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்! அரசு திடீர் உத்தரவு!
நாடு முழுவதும் வேகமெடுக்கும் கொரோனா – மீண்டும் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்! அரசு திடீர் உத்தரவு!

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து பாகிஸ்தானில் உள்நாட்டு விமானங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டும் அமல்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு திடீர் உத்தரவு:

கொரோனா 2ம் அலையின் போது தினசரி பாதிப்பு ஏராளமானாக இருந்தது. அந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. முழு நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் அதாவது சனி, ஞாயிற்றுக்கிழமை என்று பல்வேறு ஊரடங்குகளை அரசு அமல்படுத்தியது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட், தியேட்டர்கள், சிறு மற்றும் பெரிய கடைகள் மூடப்பட்டன.

Exams Daily Mobile App Download

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்களை வீடுகளில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டது. அதே நேரத்தில் மேலும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை போன்ற காரணங்களால் ஜெட் வேகத்தில் அதிகரித்த கொரோனா பாதிப்பு வெகுவாக குறையத் தொடங்கியது. தொடர்ந்து பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 50க்கும் குறைவானது. பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலை உருவானது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 6% அகவிலைப்படி சம்பள உயர்வு!

கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கொரோனா மீண்டும் வேகமெடுத்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா மீண்டும் உயிர் பயத்தை காட்டி வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 2வது நாளாக 400 ஐ தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 435 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 94 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் உள்நாட்டு விமானங்களில் பயணிப்போர் மாஸ்க் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஒரு ரோலர் கோஸ்டர் போல் செயல்படுவதாக, பாகிஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஜாவேத் அக்ரம் தெரிவித்துள்ளார். இதனால் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கொரோனா வைரஸ் தொடர்ந்து மாற்றமடைந்து வருவதால், தடுப்பூசிகள் இப்போது செயல்திறனை இழந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!