இந்தியாவில் மலிவு விலை கொரோனா தடுப்பூசி ‘Corbevax’ – இரு டோஸ் ரூ.500!!
இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு Corbevax என்ற தடுப்பூசி விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த தடுப்பூசியை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய பயாலஜிக்கல் – இ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால் அனைவருக்கும் செலுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அனைத்து மாநில அரசுகளும் தடுப்பூசிகளை இலவசமாக செலுத்தி வருகிறது. 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. ஒரு நபருக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு மற்றொரு டோஸ் செலுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மே மாதம் ரூ.1.02 லட்சம் கோடி GST வசூல் – மத்திய நிதி அமைச்சகம் தகவல்!
இந்தியாவில் சீரம் மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. அதை உற்பத்தி செய்தும் வழங்கி வருகின்றன. அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட வேண்டியுள்ள நிலையில் இதன் இருப்பு மாநில அரசுகளிடம் குறைந்துள்ளது. அரசு ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு காரணமாகவும், மக்கள் கொரோனா அச்சம் காரணமாகவும் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநில அரசுகள், மத்திய அரசிடம் தடுப்பூசிகள் வழங்க கோரிக்கைகள் விடுத்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறையால் இந்த திட்டம் தாமதமாகிறது. இதுவரை கோவாக்சின் , கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. இதனை தொடர்ந்து பயாலஜிக்கல் – இ நிறுவனம் தயாரித்துள்ள Corbevax தடுப்பூசி அறிமுகமாக உள்ளது. இது மற்ற தடுப்பூசிகளை விட மலிவான விலையில் விற்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 2 டோஸ் தடுப்பூசியை 500 ரூபாய்க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பயாலஜிக்கல் – இ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 100 ரூபாய் குறைக்க ஆலோசிக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளது. மத்திய அரசு 30 கோடி Corbevax தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.