தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு – கூட்டுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை!
தமிழக ரேஷன் கடைகளில் ஊழியர்கள் அரிசி கடத்துதல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் மலிவு விலையில் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கடைகள் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் கொரோனா நிவாரணத் தொகை, இலவச மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 14 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச 21 வகை பொருட்களை அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பும் வழங்கப்பட்டது.
ஆதார் கார்டு வைத்துள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு – PVC அட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்வது எப்படி?
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரிய வந்த நிலையில் பரிசுத்தொகுப்பு கொள்முதலில் அலட்சியமாக இருந்த அதிகரிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளில் அரிசி கடத்துதல் போன்ற முறைகேட்டை ஈடுபடும். ஊழியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்க வேண்டிய பொருட்களை அதிக விலைக்கு பிற கடைகளுக்கு விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றை பொது மக்களுக்கு விநியோகிக்காமல் பதுக்குகின்றனர். இதனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் தீர்ந்து விட்டது அடுத்த மாதம் வாங்கி கொள்ளுங்கள் என்று காரணம் கூறுகின்றனர். இது குறித்து புகார்கள் எழுந்த நிலையில் அரிசி கடத்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் ரேஷன் கடை ஊழியர்கள் மீதி சட்ட ரீதியாக மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களின் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் எனவும் அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.