ஆதார் கார்டு வைத்துள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு – PVC அட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்வது எப்படி?
இந்தியாவில் முக்கிய ஆவணமாக ஆதாரில் பாதுகாப்பான பிவிசி ஆதார் அட்டையை ஆன்லைன் மூலமாக எளிதாக பெறும் வழிமுறைகள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
PVC ஆதார்:
இந்தியாவின் முக்கிய ஆவணமாக கருதப்படும் ஆதார் அட்டை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. மத்திய மாநில அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியமாகும். இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் அட்டை UIDAI அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. நமது அனைத்து வேலைகளுக்கும் உதவும் ஆதார் கார்டை எல்லா நேரங்களிலும் நம் கைவசம் வைத்திருப்பது அவசியமாகும். தற்போதைய கால கட்டத்தில் அனைத்து வேலைகளுக்கும் ஆதார் அவசியமாகிறது. இந்த நிலையில் ஆதாரில் உள்ள விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியமாகும்.
மாதந்தோறும் ரூ.100 முதலீடு, வருமானம் ரூ.3000 – அரசின் சூப்பர் ஓய்வூதிய திட்டம்!
நமக்கு அனைத்து நேரங்களில் தேவைப்படும் ஆதார் அட்டையை தற்போது அனைவருமே கைகளில் வைத்துள்ளனர். அதனால் எதிர்பார்த்த நேரங்களில் தொலைந்து போகவும் வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நாம் பயப்பட தேவையில்லை ஆன்லைன் மூலம் இ – ஆதார் பெறலாம். மேலும் பாதுகாப்பாக பிளாஸ்டிக் ஆதார் (PVC ஆதார்) கார்டையும் நாம் பெறலாம். UIDAI வழங்கும் பிளாஸ்டிக் ஆதார் கார்டு நல்ல தரமான பிரிண்டிங், லேமினேஷனுடன் வழங்குகிறது. ஆன்லைன் மூலம் PVC ஆதார் அட்டை பெறும் வழிமுறைகள் கீழ்வருமாறு.
- http://www.uidai.gov.in என்ற அதிகாரபூர்வ இணையப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் ஆதார் அட்டையை ஆர்டர் செய் சேவை கிளிக் செய்யவும்.
- அடுத்து வரும் பக்கத்தில் கேட்க கூடிய இடத்தில் உங்களின் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.
- உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP SEND செய்யவும். பிறகு OTP எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவிட வேண்டும்.
- இறுதியாக உங்களின் ஆதார் விவரங்களை பதிவு செய்து அதை மீண்டும் ஒரு முறை சரிபார்த்து அச்சிடுவதற்கான ஆர்தர் செய்யும் முன் உறுதிபடுத்தவும்.
- பாதுகாப்பான பிவிசி ஆதார் பெறுவதற்கு சேவை கட்டணமாக டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் ரூ.50 செலுத்த வேண்டும்.
- கடைசியாக நீங்கள் பதிவு செய்தற்கு SMS செய்து கிடைக்கும். பிறகு பிளாஸ்டிக் ஆதார் கார்டு உங்கள் முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.